யாழில் கட்டை பாவாடை அணிந்து சென்ற யுவதி மீது தாக்குதல்!

ஆசிரியர் - Admin
யாழில் கட்டை பாவாடை அணிந்து சென்ற யுவதி மீது தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் கட்டை பாவாடை அணிந்த யுவதியை இளைஞர்கள் கடுமையாக தாக்கியதாக தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று முன்தினம் பலாலி வீதி, உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அந்தப் பகுதியில் நண்பகல் வேளையில், யுவதி ஒருவர் மோட்டார் சைக்கிளில் நின்று தொலைபேசியில் உரையாடியுள்ளார். நண்பகல் வேளை என்பதால் சன நடமாட்டம் குறைந்து காணப்பட்டுள்ளது.

அப்போது அவ்வழியாக வந்த இரு இளைஞர்கள் குறித்த யுவதிக்கு அருகில் வந்து கையில் இருந்த தொலைபேசியை தட்டி விட்டதுடன், கட்டைப் பாவாடை போடுவியா? என கேட்டுத் தாக்கியுள்ளனர். அத்துடன் மோட்டார் சைக்கிளையும் கீழே தள்ளி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் வீதியால் சென்ற பொதுமக்கள் யுவதியிடம் நடந்தவற்றை கேட்டு அவரை ஆறுதல் படுத்தியதுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு