யாழ்.நெடுந்தீவு கடற்பகுதியில் கடத்தல்காரர்களின் படகுகளை முற்றுகையிட முயன்றபோது விபத்து..! கடற்படை சிப்பாய் ஒருவரை காணவில்லை, இருவர் படுகாயம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவு கடற்பகுதியில் கடத்தல்காரர்களின் படகுகளை முற்றுகையிட முயன்றபோது விபத்து..! கடற்படை சிப்பாய் ஒருவரை காணவில்லை, இருவர் படுகாயம்...

யாழ்.நெடுந்தீவு கடற்பகுதியில் கடற்படை சிப்பாய் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தியாவிலிருந்து இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த படகுகளை முற்றுகையிட முயற்சித்தபோது,

கடற்படை படகுகள் 2 ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் 4 கடற்படைச் சிப்பாய்கள் கடலில் தவறி விழுந்ததாகவும் அவர்களில் மூவர் மீட்க்கப்பட்டபோதும்

ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் காணாமல்போன கடற்படை சிப்பாய் தேடும் பணிகள் கடற்படையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் மீட்கப்பட்ட 3 கடற்படை சிப்பாய்களின் இருவர் காயமடைந்த நிலையில் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 

மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை கடற்படையினர் முற்றுகையிட்ட படகுகளில் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு