யாழ்.நகரில் கோர விபத்து..! சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் கோர விபத்து..! சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்..

யாழ்.நகரில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். 

குறித்த விபத்து இன்று காலை சத்திர சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் தாயாருடன் பயணித்த நிலையில், 

பின்னால் வந்த பாரவூர்தி மோட்டார் சைக்கிள் மீது மோதிய நிலையில் துாக்கி வீசப்பட்ட சிறுவன் பாரவூர்தியின் சக்கரத்தில் விழுந்து

உயிரிழந்துள்ளான். இந்நிலையில் பாரவூர்தி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுனர். 

சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாரவூர்தியின் கண்ணாடிகளை அடித்து நொருக்கியுள்ளனர். 

இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் தாவடி பகுதியை சேர்ந்த அஜித்தன் அபிநயன்(வயது10) என தொியவந்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு