யாழ்.அச்சுவேலியில் டீசலுக்காக காத்திருந்த பாரவூர்த்தி மோதியதில் வயோதிபர் பலி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.அச்சுவேலியில் டீசலுக்காக காத்திருந்த பாரவூர்த்தி மோதியதில் வயோதிபர் பலி..!

யாழ்.அச்சுவேலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபரை டீசலுக்காக காத்திருந்த பாரவூர்தி மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. அச்சுவேலி - தெல்லிப்பழை வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகில் டீசலுக்காக காத்திருந்த 

பாரவூர்தி வீதியால் சென்ற முதியவரை மோதி தள்ளியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

சம்பவத்தில் அச்சுவேலி பத்தமேனியை சேர்ந்த தம்பிப்பிள்ளை கனரகரட்ணம் (வயது72) என்பரே உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு