யாழ்.மானிப்பாய் பகுதியில் மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று சேதம்! தெய்வாதீனமாக வீட்டிலிருந்தோர் தப்பினர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மானிப்பாய் பகுதியில் மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று சேதம்! தெய்வாதீனமாக வீட்டிலிருந்தோர் தப்பினர்..

யாழ்.மாவட்டத்தில் இன்று மழையுடன் கூடிய காலநிலை காணப்பட்ட நிலையில் மானிப்பாய் பகுதியில் மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று சேதமடைந்துள்ளது.

மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்கிற்கு அருகே உள்ள வீட்டின் மீது மதியமளவில் மின்னல் தாக்கியதால் வீடானது பகுதியளவில் சேதமாகியுள்ளது.

எனினும் இந்த அனர்த்தத்தினால் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு