யாழ்.மணியந்தோட்டத்தில் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் மோட்டார் சைக்கிள் மீட்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மணியந்தோட்டத்தில் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் மோட்டார் சைக்கிள் மீட்பு..!

யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் கொலை செய்யப்பட்டு வீட்டின் பின் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் மோட்டார் சைக்கிள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 

பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பணம் வாங்கியவர் பணம் வழங்கிய குறித்த பெண்ணை கொடூரமாக தாக்கி கொலை செய்து புதைத்துள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில் குறித்த பகுதியில் நீதிவான் முன்னிலையில் அகழ்வு பணிகள் இடம்பெறும் நிலையில் தற்போது மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் அகழ்வு பணிகள் தொடர்ந்து இடம்பெறுகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு