யாழ்.மணியந்தோட்டத்தில் கொன்று வீட்டின் பின் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை மீட்கும் பணி ஆரம்பம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மணியந்தோட்டத்தில் கொன்று வீட்டின் பின் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை மீட்கும் பணி ஆரம்பம்..!

யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்னால் புதைக்கப்பட்டுள்ள பெண்ணின் சடலத்தை மீட்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 

நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா மற்றும் சட்ட மருத்துவ வல்லுநர் எஸ்.பிரணவன் ஆகியோரின் முன்னிலையில் இந்தப் பணி முன்னெடுக்கப்படுகிறது.

அயல் கிராமத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கடந்த முதலாம் திகதி தொடக்கம் காணாமற்போயிருந்தார். 

இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலினடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

காசுக் கொடுக்கல் வாங்கல் காரணமாக எழுந்த முரண்பாட்டினால் சந்தேக நபர்கள் பெண்ணை அடித்துக் கொலை செய்திருப்பதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு