யாழ்.நாரந்தனையில் அபாயகரமான பொருளுடன் குடும்பஸ்த்தரை கைதுசெய்த பொலிஸ் புலனாய்வு பிரிவு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.நாரந்தனையில் அபாயகரமான பொருளுடன் குடும்பஸ்த்தரை கைதுசெய்த பொலிஸ் புலனாய்வு பிரிவு..!

யாழ்.ஊர்காவற்றுறை - நாரந்தனை பகுதியில் போதை மருந்துடன் 47 வயதான குடும்பஸ்த்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் 

மற்றும் பொலிஸார் இணைந்து இக் கைது நடவடிக்கையினை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நேற்றய தினம்  

ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

குறித்த போதை மருந்து எங்கிருந்து கிடைத்தது என்ற விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு