மதுபானசாலையை அகற்றகோரி போராட்டம்...

ஆசிரியர் - Editor I
மதுபானசாலையை அகற்றகோரி போராட்டம்...

பருத்தித்துறை நகர்ப்பகுதியில் அமைந்துள்ள மதுபான சாலை நகரசபையின் அனுமதியின்றி சட்டவிரோதமாக பல வருடங்களாக இயங்கிவருவதைக் கண்டித்து குறித்த மதுபானசாலையை அகற்றுமாறு கோரி இன்று காலை பருத்தித்துறை நகரசபை முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

குறித்த மதுபீனசாலையானது காவில் இருந்து 50மீற்றர் தூரத்திலும் பீடசீலையில் இருந்து 300 மீற்றருக்கும் குறைவான தூரத்திலேயே குறித்த மதுபானசாலை அமைந்துள்ளது.இவ் மதுபானசாலையினை அகற்றுமாறு கோரி பல வருடமீக பொது அமைப்புக்கள் மற்றும் மக்கள் பல தடவைகள் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

ஆனாலும் அரசியல் பின்னணி மற்றும்  பணபரிமாற்றம் போன்ற சட்டவிரோத நடவடிக்கை காரணமாக இவ் மதுபானசாலை தொடர்ந்தும் இயங்கிவருகிறது என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.குறித்த ஆர்ப்பாட்டத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பருத்தித்துறை நகரசபை உறப்பினர்கள் மற்றும் பொதுமக்சள் இணைந்து நடாத்தியிருந்தனர்.





பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு