யாழ்.மாநகரம் வெறிச்சோடி காணப்படுகிறது..! பொலிஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரம் வெறிச்சோடி காணப்படுகிறது..! பொலிஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில்..

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்.நகரில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றது.

நேற்று மாலை 6 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் யாழ்.நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.

நகருக்குள் நுழையும் பிரதான சந்திகள், வீதிகள் பொலிஸார் ஆங்காங்கே நின்று வீதியால் செல்பவர்களை துருவித்துருவி விசாரித்து வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இதேவேளை இலங்கை போக்குவரத்துசபை பேருந்து சேவை மற்றும் தனியார் போக்குவரத்து சேவை என்பன இடம்பெறவில்லை என்பதுடன் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த 

ஏனைய சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு