ஊரடங்கு நடைமுறைகள் தொடர்பாக யாழ்.மாவட்ட மக்களுக்கு மாவட்டச் செயலர் விடுத்துள்ள அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு நடைமுறைகள் தொடர்பாக யாழ்.மாவட்ட மக்களுக்கு மாவட்டச் செயலர் விடுத்துள்ள அறிவிப்பு..!

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் பொதுமக்கள் வெளியில் நடமாடாமல் இருப்பதே சிறந்தது. என யாழ்.மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவுறுத்தியிருக்கின்றார். 

ஊரடங்கு நடைமுறைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

நேற்று மாலை 6 மணி முதல் நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,

தேவையற்ற நடமாட்டங்களை தவிர்த்து ஊரடங்கு காலத்தில் வெளியில் நடமாடாமல் இருப்பது சிறப்பானது. 

மிக மிக அத்தியாவசியமான தேவைகள் மற்றும் இதர அத்தியாவசியமான விடயங்களை பொறுத்தவரையில் அவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள பொலிஸ் நிலையங்களுடன் தொடர்பு கொண்டு அதன் ஊடாக கிடைக்கின்ற அறிவித்தலின் படி செயற்படலாம்.

இது தொடர்பாக மேலதிக தகவல்களை உரிய அறிவித்தல்கள் எங்களுக்கு முறையாக கிடைத்த பிற்பாடு பொதுமக்களுக்கு தெரிவிப்போம். 

அதுவரை பொதுமக்கள் மிகவும் அமைதி காத்து ஊரடங்குச் சட்டத்தை அனுசரித்து நடக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு