யாழ்.தாவடியில் வாள்வெட்டு குழு ரவுடிகள் வீடு புகுந்து அட்டகாசம்! மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை..

ஆசிரியர் - Editor I
யாழ்.தாவடியில் வாள்வெட்டு குழு ரவுடிகள் வீடு புகுந்து அட்டகாசம்! மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை..

யாழ்.தாவடி பகுதியில் நேற்று  வியாழக்கிழமை இரவு  வீடொன்றுக்குள் புகுந்த வன்முறை கும்பல் வீட்டின் மீதும், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

03 மோட்டார் சைக்கிள்களில் வந்த 06 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ளனர். அத்துடன் வீட்டின் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் 02 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வீட்டின் 06 ஜன்னல்கள் சேதமாகியாள்ளன. மேலும் இரண்டு கண்ணாடி மேசைகளின் கண்ணாடிகளும் சேதமடைந்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு