யாழ்.உரும்பிராய் - செல்வபுரத்தில் பொலிஸார் மீதான தாக்குதல், இரு பெண்கள் உட்பட 5 பேர் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.உரும்பிராய் - செல்வபுரத்தில் பொலிஸார் மீதான தாக்குதல், இரு பெண்கள் உட்பட 5 பேர் கைது..!

யாழ்.உரும்பிராய் - செல்வபுரம் பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு உத்தியோகத்தர்கள் 

உரும்பிராய் செல்வபுரம் பகுதியில் சந்தேகநபர் ஒருவரை விசாரணை செய்வதற்காக தேடிச் சென்றிருந்த நிலையில், 

குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் படுகாயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிசார் இரண்டு பெண்கள் 3 ஆண்கள் என ஐவரைக் கைது செய்ததுடன் 

பிரதான சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு