தறிகெட்டு ஓடிய கப் வாகனம்..! நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை மோதி தள்ளி விபத்து, யாழ்.புத்துாரில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
தறிகெட்டு ஓடிய கப் வாகனம்..! நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை மோதி தள்ளி விபத்து, யாழ்.புத்துாரில் சம்பவம்..

யாழ்.புத்துார் - ஆவரங்கால் பகுதியில் கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகே இருந்த 

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதில் ஒரு மோட்டார் சைக்கிள் பட்டா வாகனத்துடன் சேர்ந்து பாலத்தினுள் சென்றது.

குறித்த சம்பவத்தில் பட்டா வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் இரண்டும் சேதமடைந்துள்ளன. இதிலே மோட்டார் சைக்கிளுடன் நின்றவர் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.

பட்டா ரக வாகன சாரதியின் கவனக்குறைவால் குறித்த விபத்துச் சம்பவம் .சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு