யாழ்.உரும்பிராய் - யோகபுரம் பகுதியில் பொலிஸார் மீது சரமாரி தாக்குதல்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.உரும்பிராய் - யோகபுரம் பகுதியில் பொலிஸார் மீது சரமாரி தாக்குதல்..!

யாழ்.உரும்பிராய் - யோகபுரம் பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நீதிமன்றினால் பிடிவிறாந்தை நடைமுறைப்படுத்த சென்றபோது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோகபுரம் பகுதியை சேர்ந்த இருவருக்கு நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு செல்ல தவறியமையால் நீதிமன்றினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த சென்ற கோப்பாய் பொலிஸ் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த  பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவரையும் கைது செய்ய முயன்ற போது, 

அங்கு நின்ற கும்பல் ஒன்று இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன், அவர்கள் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு