யாழ்.மாதகலில் நங்கூரம் திருடிய குற்றச்சாட்டில் கடற்படை சிப்பாய் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாதகலில் நங்கூரம் திருடிய குற்றச்சாட்டில் கடற்படை சிப்பாய் கைது..!

யாழ்.மாதகல் கடற்கரையில் மீனவர்களின் படகுகளிலிருந்த நங்கூரங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை சிப்பாய் ஒருவர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த வருடம் மாதகல் - லுார்து மாதா கோவிலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் தரித்துவிடப்படும் மீனவர்களின் படகுகளில் இருந்த நங்கூரங்கள் பட்டா ரக வாகனத்தில் ஏற்றிச் செல்லப்படுவதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர். 

இது தொடர்பாக இளவாலை பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் நங்கூரம் ஏற்றிய வாகனம் மடக்கி பிடிக்கப்பட்டது. இதன்போது கைதான சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்

மேற்படி சிப்பாய் ஒருவர் நங்கூரங்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு பட்டமை தொியவந்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு