யாழ்.கைதடி - கோப்பாய் வீதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தவர் மரணம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கைதடி - கோப்பாய் வீதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தவர் மரணம்..!

துவிச்சக்கர வண்டியில் சென்றவரை பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்ப தலைவர் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார். 

கைதடி மேற்கைசேர்ந்த சீ.ரவீந்திரன் (வயது55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொிவித்ததாவது, நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் 

கைதடி - கோப்பாய் வீதியில் கைதடி கலைவாணி வித்தியாலயத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றிருக்கின்றது. 

மோட்டார் சைக்கிளில் சென்றவர் இந்த விபத்தை எற்படுத்தியிருக்கின்றார். சம்பவத்தில் காயமடைந்த ரவிச்சந்திரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு

சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு