யாழில் தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தலைவருக்கு நேர்ந்த கதி

ஆசிரியர் - Admin
யாழில் தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தலைவருக்கு நேர்ந்த கதி

யாழில் கடந்த வாரம் தனது இரு சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டுத் தானும் விஷமருந்தித் தற்கொலைக்கு முயற்சித்து யாழ். போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குடும்பத்தலைவர் சிகிச்சை பலனின்றி ஆறு நாட்களின் பின்னர் நேற்று முன்தினம் சனிக்கிழமை(05) இரவு உயிரிழந்துள்ளார்.

குடும்ப முரண்பாடுகள் காரணமாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த கணவர் தனது பிள்ளைகளான பத்து வயது மகனுக்கும் ஏழு வயது மகளுக்கும் இரவு உணவில் கிருமிநாசியைக் கலந்து கொடுத்துத் தானும் உட்கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ். சாவகச்சேரியில் கடந்த-30 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து அயலில் வாழ்ந்து வந்த உறவினர்கள் சிலர் மீட்டுச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் மூவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

வைத்தியர்களின் பெரும் போராட்டத்தின் மத்தியில் அவரது இரு பிள்ளைகளும் காப்பாற்றப்பட்ட போதும் அவர்களின் தந்தையாரைக் காப்பாற்ற முடியவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு