நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலுக்குள் வைத்து இருவர் மீது கொலைவெறி வாள்வெட்டு

ஆசிரியர் - Admin
நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலுக்குள் வைத்து இருவர் மீது கொலைவெறி வாள்வெட்டு

நீர்வேலியில் இருவர் மீது  வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரவித்தனர்.

நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து இன்று (7)  மாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

அதே இடத்தைச் சேர்ந்த அப்புத்துரை கிரிசி (வயது -23) என்ற இளைஞன் கழுத்தில் வெட்டுப்பட்ட நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்படுகிறது என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

அதே இடத்தைச் சேர்ந்த கிரிகேசன் (வயது -23) காலில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

பொலிஸாரல் தேடப்பட்டுவரும் ஆவா குழுவின் முக்கியஸ்தர் வினோத் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பலே இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டது என பொலிஸார் கூறினர்.

நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் இருவரும் இருந்துள்ளனர். கோவிலுக்குள் வைத்தே அவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அவர்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிளை கோவில் கிணற்றுக்குள வாள்வெட்டுக் கும்பல் தூக்கி வீசியுள்ளது. ஒருவரின் கைபேசியை கோவிலுக்கு முன்பாக உள்ள தேங்காய் உடைக்கும் கல்லில் போட்டு கும்பல் உடைத்துள்ளது.

அண்மையில், வாள் வெட்டுக்கு இலக்கான நபர் ஆவாக் குழுவைச் சேர்ந்த ஒருவரை தகாத வார்த்தையால் பேசியதாகவும், அந்த கோபத்தின் நிமித்தம், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கிணற்றுக்குள்ளிலிருந்த மோட்டார் சைக்கிள், சைக்கிள் ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டன. அத்துடன் வாள்வெட்டு நடத்தியவரின் என நம்பப்படும் முகத்தை மறைக்கும் துணியும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு