யாழ்.கொக்குவில் பகுதியில் வன்முறை குழு அதிகாலையில் வீடு புகுந்து அட்டகாசம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொக்குவில் பகுதியில் வன்முறை குழு அதிகாலையில் வீடு புகுந்து அட்டகாசம்!

யாழ்.கொக்குவில் கிழக்கு வீடொன்றுக்குள் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை நுழைந்த வன்முறைக் கும்பல் வீட்டின் கதவு, ஜன்னல்களை அடித்து நொருக்கிச் சேதப்படுத்தியதுடன், வீட்டிலிருந்த ஆட்டோவை தீயிட்டு கொழுத்தியுள்ளது. 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அதிகாலையில் இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த வன்முறை கும்பல் வீட்டு வளவுக்குள் நுழைந்து கதவு, ஜன்னல்களை சேதப்படுத்தியதுடன், வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை கொழுத்தினர். 

குறித்த சம்பவங்கள் அனைத்தும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சீ.சி.ரி.வி கமரா பதிவுகள் ஊடாக அறியப்பட்டுள்ளதுடன், சீ.சி.ரி.வி பதிவுகளை அடிப்படையாக கொண்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு