யாழ்.சிறுவர் நீதிமன்றத்தின் முன்னால் உள்ள வீட்டில் சமையல் எரிவாயு சிலின்டர் கொள்ளை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சிறுவர் நீதிமன்றத்தின் முன்னால் உள்ள வீட்டில் சமையல் எரிவாயு சிலின்டர் கொள்ளை..!

யாழ்.சிறுவர் நீதிமன்றின் முன்னால் உள்ள வீடொன்றிலிருந்து சமையல் எரிவாயு சிலின்டர் கொள்ளையடித்துச் செல்லப்பட்டிருக்கின்றது. 

நீதிமன்றின் வெளியே காவலாளிகள் கடமையில் இருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரிடம் வினவியபோது இரண்டாவது தடவையும் எரிவாயு சிலிண்டர் திருடப்பட்டதாகவும் 

எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதை தொடர்ந்து தாம் எரிவாயு சிலிண்டரை வீட்டின் வெளியே பொருந்தியிருந்த நிலையிலேயே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து நீதிமன்ற காவலில் இருந்த பொலிஸாரிடம் வினவியபோது தமது கடமை நீதிமன்ற எல்லைக்குட்பட்டதாக தெரிவித்தனர் என குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் பல திருட்டு கொள்ளை கொலை என பல சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு