யாழ்.மாநகரில் தொடர் துவிச்சக்கர வண்டி திருட்டு..! பொலிஸார் முன் அலைந்து திரிந்ததால் மாட்டினார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் தொடர் துவிச்சக்கர வண்டி திருட்டு..! பொலிஸார் முன் அலைந்து திரிந்ததால் மாட்டினார்..

யாழ்.நகர் பகுதியில் சைக்கிள் திருடிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். 

யாழ்.மாநகரில் அண்மைய நாட்களில் தொடர்ச்சியாக துவிச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படும் நிலையில், 

சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் துவிச்சக்கர வண்டி கொண்டு செல்வதை யாழ்.நகரில் சுற்றுகாவலில் இருந்த பொலிஸார் கண்டுள்ளனர். 

இதனையடுத்து குறித்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவிருந்து சைக்கிள் திருடியமை கண்டறியப்பட்டுள்ளது. 

பின்னர் கோப்பாய் தெற்கை சேர்ந்த 27 வயதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு