தந்தையின் கார் சில்லுக்குள் சிக்கிய ஒன்றரை வயது குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..!

ஆசிரியர் - Editor I
தந்தையின் கார் சில்லுக்குள் சிக்கிய ஒன்றரை வயது குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..!

தந்தை பின்நோக்கி செலுத்திய காரின் சக்கரத்திற்குள் சிக்கிய ஒன்றரை வயது ஆண் குழந்தை காயமடைந்துள்ளது. 

இந்த சம்பவம் நேற்று கிளாலி - எழுதுமட்டுவாழ் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. காரை வெளியே கொண்டு செல்வதற்காக தந்தை பின்புறம் நகர்த்தியபோது, 

பின்புறம் நின்றிருந்த குழந்தை சக்கரத்திற்குள் சிக்கியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த குழந்தை சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு

மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு