மின்வெட்டு நேரத்தில் பாடசாலைக்குள் புகுந்து துணிகர கொள்ளை..! யாழ்.அச்சுவேலியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
மின்வெட்டு நேரத்தில் பாடசாலைக்குள் புகுந்து துணிகர கொள்ளை..! யாழ்.அச்சுவேலியில் சம்பவம்..

மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டதை தமக்கு சாதகமாக பயன்படுத்தி யாழ்.அச்சுவேலி மத்திய கல்லுாரி கணனி வளாகத்திற்குள் நுழைந்த கொள்ளை கும்பல் பெருமளவு பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 

பாடசாலையின் பரீட்சைகள் ஆரம்பித்துள்ள நிலையில் நேற்றிரவு ஏற்பட்ட மின் வெட்டினை வாய்ப்பாக பயன்படுத்தி பாடசாலையின் கதவு ஜன்னல் உடைக்கப்பட்டு கணினி உபகரணங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

பாடசாலையின் கண்காணிப்பு கமரா மின் துண்டிப்பினால் இயங்காதிருந்த வேளையில் குறித்த திருட்டுச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த கொரோனா காலத்தின் போதும் பாடசாலையில் தங்கியிருந்து சிலர் 

அங்குள்ள பொருட்களை சூறையாடிச் சென்றனர். இருப்பினும் இது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் நேற்று மாலை குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற பாடசாலையின் வளாகத்தினுள் போலீசாரின் மோப்ப நாய் மற்றும் தடயவியல் போலீசார் உள்ளிட்டோர் தடயங்களை சேகரித்தனர். குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் 

அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு