யாழ்.போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தம்..! மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு என விளக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தம்..! மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு என விளக்கம்..

மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர் மு.நந்தகுமார் தொிவித்துள்ளார். 

கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டமை தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. 

மேலும் சில மருந்துப் பொருட்கள் குறைந்தளவிலேயே உள்ளது. இதனாலேயே சத்திர சிகிச்சை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. என கூறியுள்ளதுடன், மருந்துகளுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு