சார்க் நாடுகளின் புற்நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவராக நடராஜா ஜெயக்குமார் தேர்வு..!

ஆசிரியர் - Editor I
சார்க் நாடுகளின் புற்நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவராக நடராஜா ஜெயக்குமார் தேர்வு..!

சார்க் நாடுகளில் உள்ள புற்நோய் நிபுணர்களின் சங்க தலைவராக மஹரகம தேசிய புற்றுநோயியல் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் நடராஜா ஜெயக்குமார் தொிவு செய்யப்பட்டிருக்கின்றார். 

சார் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி நேற்று முன்தினம் இணையவழி ஊடாக இடம்பெற்ற தலைவர் தெரிவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தற்போது மஹரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் வைத்திய நிபுணராக கடமையாற்றும் 

வைத்திய நிபுணர் ஜெயக்குமார் தெரிவு செய்யப்பட்டதுடன் செயலாளராக வைத்தியர் எஸ்.செந்தூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தலைவராக தெரிவு செய்யப்பட்ட வைத்தியர் ஜெயக்குமார் 

யாழ்ப்பாணத்தில் போர் முடிவுற்று மீளத் திரும்பிய காலப்பகுதியில் தெல்லிப்பழையில் புற்றுநோய் பிரிவை ஏற்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கியிருந்தார். அதுமட்டுமல்லாது வைத்தியத்துறையில் சிறந்து விளங்கியமைக்காக 

மிகக்குறைந்த வயதில் யாழ்.மாநகர சபையால் வழங்கப்படும் யாழ் விருதையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு