இறுதி நேரத்தில் நல்லூர் வழிபாட்டை தவிர்த்த பிரதமர் மஹிந்த மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்தியுள்ளார்..!

ஆசிரியர் - Editor I
இறுதி நேரத்தில் நல்லூர் வழிபாட்டை தவிர்த்த பிரதமர் மஹிந்த மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்தியுள்ளார்..!

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஸ நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளை நடத்தவிருந்த நிலையில் பிரதமருக்கு எதிராக போராட்டம் நடாத்த முஸ்த்தீபு காட்டப்பட்டதால் இறுதி நேரத்தில் நல்லூர் வழிபாட்டை தவிர்த்த பிரதமர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் காலை 9.30 மணிக்கு வழிபாடு நடத்தியுள்ளார்.

நல்லூரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது என வழங்கப்பட்ட தகவலையடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நல்லூர் ஆலய விஜயத்தை முன்னிட்டு ஆலயச் சூழலில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வீதிகளும் மூடப்பட்டு காணப்பட்டது.

ஆலயத்திற்குச் செல்லும் பிரதான வீதிகளான பருத்தித்துறை வீதி கோவில் வீதி என்பன பொலிசாரினால் வழிமறிக்கப்பட்டு மாற்றுப்பாதை ஊடாக பொதுமக்கள் அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தன் ஆலயம் மற்றும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக போலீஸ் மற்றும் இராணுவத்தின் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நல்லூருக்காண விஜயம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து பாதுகாப்பு தரப்பினர் அங்கிருந்து விலகிச் சென்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு