காய்ச்சல், வயிற்றோட்டம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத பெண் குழந்தை மரணம்..!

ஆசிரியர் - Editor I
காய்ச்சல், வயிற்றோட்டம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத பெண் குழந்தை மரணம்..!

காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. 

நெடுந்தீவு 11ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அமல்ராஜ் டென்ஜான்சிகா என்ற 9 மாதப் பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.

டென்ஜான்சிகாவுக்கு நேற்றுமுன்தினம் இரவு காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை பெற்றோர் நெடுந்தீவு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் குழுந்தையை மாற்றினர்.

ஆயினும் குழந்தை யாழ்.போதனா மருத்துவமனைக்குக் கொண்டுவரும் முன்னரே உயிரிழந்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு