யாழ்.சுன்னாகம் - கந்தரோடையில் புதிதாக புத்தர் சிலையா? நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நோில் ஆராய்வு...

ஆசிரியர் - Editor I
யாழ்.சுன்னாகம் - கந்தரோடையில் புதிதாக புத்தர் சிலையா? நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நோில் ஆராய்வு...

யாழ்.சுன்னாகம் - கந்தரோடை பகுதியில் புதிதாக புத்தர் சிலை ஒன்று அமைக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நோில் சென்று ஆராய்ந்துள்ளார். 

வெளியான தகவல் தொடர்பாக வலி,தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தி.பிரகாஸ், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை அழைத்துச் சென்று நோில் ஆராய்ந்திருக்கின்றார். 

குறிப்பாக அங்கு நின்றிருந்த பொளத்த மதகுருவிடம் வினவியிருந்தார். குறித்த சந்திப்பின் போது அதிகளவான இராணுவத்தினர் பிரசன்னமாகியிருந்ததாக அங்கிருந்தவர்களால் அவதானிக்கப்பட்டது. 

பாராளுமன்ற உறுப்பினருடன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு