யாழ்.சுழிபுரத்தில் வாள்களுடன் வீடு புகுந்து அச்சுறுத்தி கொள்ளை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சுழிபுரத்தில் வாள்களுடன் வீடு புகுந்து அச்சுறுத்தி கொள்ளை..!

யாழ்.வட்டுக்கோட்டை - சுழிபுரம் பறாளை வீதியில் உள்ள வீடொன்றில் நள்ளிரவில் வாளுடன் புகுந்த இருவர் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி நகைகளை கொள்ளையடித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நள்ளிரவில் வாளுடன் வீட்டுக்குள் புகுந்த இருவர் வீட்டிலிருந்தவர்களை வாள் முனையில் அச்சுறுத்தி 

ஒரு பவுண் சங்கிலி, அரைப்பவுண் தோடு, அரைப்பவுண் மோதிரம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. 

முறைப்பாட்டிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு