யாழ்.வடமராட்சியில் டீசல்/மண்ணெண்ணெய் இல்லை..! இரு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டும் பெற்றோல், காத்திருக்கும் மக்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சியில் டீசல்/மண்ணெண்ணெய் இல்லை..! இரு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டும் பெற்றோல், காத்திருக்கும் மக்கள்..

யாழ்.வடமராட்சி குஞ்சர்கடை, நெல்லியடி, மந்திகை, சாரையடி, பருத்தித்துறை துறைமுகம், வல்வெட்டித்துறை பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எவற்றிலும் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் இல்லை. 

இதனால் பயணிகள் பேருந்து, ரிப்பர், மற்றும் டீசல் வாகனங்கள் வீதியோரங்களில் நிறுத்தப்பட்டு சாரதிகள் டீசலுக்காக நீண்டநேரமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதேவேளை மந்திகை மற்றும் நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தவிர்ந்த 

எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெட்ரோலும் இல்லை. குறித்த இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெட்ரோல் நிரப்ப மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல் நிரப்புவதை அவதானிக்க முடிகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு