யாழ்.சாவகச்சோியில் 13 வயது மாணவனுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்! கைதான ஆசிரியர் பிணையில் விடுதலை..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோியில் 13 வயது மாணவனுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்! கைதான ஆசிரியர் பிணையில் விடுதலை..

யாழ்.தென்மராட்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயது சிறுவனுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் கைதான ஆசிரியருக்கு சாவகச்சோி நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 

13 வயதான குறித்த சிறுவனுக்கு ஆண் ஆசிரியர் ஒருவர் ஓரின பாலியல் தொடர்பான துன்புறுத்தல்களை செய்த நிலையில் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்ட குறித்த சிறுவன் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு

பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த ஆசிரியர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டு,

நேற்றய தினம் சாவகச்சோி நீதிவான் நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை யூட்ஸன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் ஆசிரியர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு