வளர்ப்பு நாய் குட்டியின் நக கீறலுக்கு சிகிச்சை பெற தவறிய குடும்பஸ்த்தர் மரணம்..! யாழ்.பண்டத்தரிப்பில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வளர்ப்பு நாய் குட்டியின் நக கீறலுக்கு சிகிச்சை பெற தவறிய குடும்பஸ்த்தர் மரணம்..! யாழ்.பண்டத்தரிப்பில் சம்பவம்..

வளர்ப்பு நாய்க்குட்டியின் நக கீறல் தொடர்பாக கவனம் செலுத்தாமையினால் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழ்.பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

பண்டத்தரிப்பு - தம்பித்துரை வீதியை சேர்ந்த காருண்யசிவம் ஆனந்தராசா (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தர் வீட்டில் வளர்க்கப்பட்ட 

மூன்று மாத காலம் நிரம்பிய நாய்க்குட்டி ஒன்று அவரை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது நகத்தினால் கீறியுள்ளது. 

நகத்தினால் கீறி இரண்டு நாட்களின் பின்னர் நாய்க்குட்டி உயிரிழந்துள்ளது. அந்நிலையில் நாய்க்குட்டி நகத்தினால் கீறியதற்கு உரிய முறையில் சிகிச்சை பெற தவறி இருந்த குடும்பஸ்தர் , 

நேற்றைய தினம் திங்கட்கிழமை நீர் வெறுப்பு நோய் அறிகுறிகளுடன் உடல் நல குறைவுக்கு உள்ளாகியுள்ளனர். அதை அடுத்து அவரை குடும்பத்தினர் 

சங்கானை வைத்திய சாலையில் அனுமதித்த நிலையில் அங்கிருந்து யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். 

அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு