யாழ்.நகரில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து நுாதன திருட்டு..! சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து நுாதன திருட்டு..! சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..

ஓடுகளை திருடி விற்பனை செய்துவந்த நபரை எதிர்வரும் 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.பிற்றர்போல் உத்தரவிட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 30 வயதான சந்தேகநபர் நகர்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து ஓடுகளை திருடி விற்பனை செய்துவந்தார். இந்நிலையிலேயே குறித்த நபர் யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். 

அவரை நேற்றுமுன்தினம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியபோதே விளக்கமறியல் உத்தரவிடப்பட்டது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு