யாழ்.நல்லுார் மந்திரி மனையின் கதவு, ஜன்னல்களை காணவில்லை..! பொறுப்பவாய்ந்தோர் உறக்கத்தில் இருப்பதால் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நல்லுார் மந்திரி மனையின் கதவு, ஜன்னல்களை காணவில்லை..! பொறுப்பவாய்ந்தோர் உறக்கத்தில் இருப்பதால் சம்பவம்..

யாழ்ப்பாணத்தில் வரலாற்று தொன்மைவாய்ந்த இடங்களில் ஒன்றான நல்லுார் மந்திரி மனையின் யன்னல் மற்றும் யன்னல் கம்பிகள் என்பன களவாடப்பட்டுள்ளன.

மந்திரி மனையின் பின் பக்கமாக காணப்பட்ட யன்னல்களின் கம்பிகள் மற்றும் யன்னல் என்பவை பெயர்த்தெடுக்கப்பட்டு திருடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மந்திரி மனை என்பது இலங்கையின் வட பகுதியில் இருந்த யாழ்ப்பாண மாவட்டத்தின் தலைநகராக இருந்த நல்லூர் அரச காலத்தோடு சம்மந்தபடுகிறது.

போர்த்துக்கேயரால் யாழ்ப்பாண அரசு கைப்பற்றப்படுவதற்க முன்னுள்ள காலப்பகுதி வரை அமைச்சரின் இருப்பிடமாக இருந்துள்ளது.

இது 13 நூற்றாண்டுக்கு முற்பட்டது. இக் கட்டிடம் செங்கட்டி சுண்ணாம்பு சாந்து மரங்கள் ஓடுகள்கொண்டு கட்டப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு