யாழ்.கல்லுண்டாய் வீதியில் விபத்து! வீதி திருத்த பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி பலி..

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்லுண்டாய் வீதியில் விபத்து! வீதி திருத்த பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி பலி..

யாழ்.கல்லுண்டாய் வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் வீதி திருத்த பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் வீதியை கடக்க முற்பட்டவேளை காரைநகரில் இருந்து யாழ்.நோக்கி பயணித்த கப் ரக வாகனம் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதி அபிவிருத்தி பணிகளுக்காக பதுளையில் இருந்து யாழிற்கு வந்திருந்த 61 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு