யாழ். நீர்வேலியில் தனியார் பேருந்தை வழிமறித்த நபர் சாரதியின் மூக்கை வெட்டிவிட்டு தப்பி ஓட்டம்..!

ஆசிரியர் - Editor I
யாழ். நீர்வேலியில் தனியார் பேருந்தை வழிமறித்த நபர் சாரதியின் மூக்கை வெட்டிவிட்டு தப்பி ஓட்டம்..!

யாழ்.பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து சாரதியின் மூக்கை கத்தியால் கீறி விட்டு நபர் ஒருவர் தப்பி ஓடியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இன்று செவ்வாய்க்கிழமை மாலை பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

இதன்போது நீர்வேலி கந்தசாமி ஆலயத்திற்கு அருகாமையில் சென்று கொண்டிருந்தபோது வாகனத்தை வழிமறித்த நபர் ஒருவர் சாரதியின் மூக்கில் கத்தியால் கீறி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

மூக்கில் கத்தி வெட்டுக்கு இலக்கான சாரதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு