யாழில் ஆவா குழுவைச் சேர்ந்த ஐவர் வாள்களுடன் கைது!

ஆசிரியர் - Admin
யாழில் ஆவா குழுவைச் சேர்ந்த ஐவர் வாள்களுடன் கைது!

சுன்னாகம் பொலிஸார் நேற்று இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, ஆவா குழுவைச் சேர்ந்த 5 பேர் வாள்களுடன் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம், கைதடி, நுணாவில், வவுனியா பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்நு 4 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.சுன்னாகம் பகுதியில் வாள் வெட்டை மேற்கொள்வதற்கு எத்தனித்த போதே, குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும், கைது செய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு