யாழ்.மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் வீட்டின் மீது 3வது நாளாகவும் தாக்குதல்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் வீட்டின் மீது 3வது நாளாகவும் தாக்குதல்..!

யாழ்.மானிப்பாய் பிரதேசசபையின் தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் வீட்டின் மீது நேற்று 3வது நாளாகவும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 

வீட்டின் வேலிக்கு போடப்பட்டிருந்த தகரங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. வீட்டினுள் புகுந்து உடமைகளும் தாக்கப்பட்டிருக்கின்றன. 

அத்துடன் வீட்டில் வளர்க்கப்பட்டுள்ள கிளியும் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கின்றது. இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய பெயரை பயன்படுத்தி 3 நாட்களுக்கு முன் குறித்த பிரதேசசபை உறுப்பினரின் வீட்டினுள் புகுந்த நபர் ஒருவர் 

தாக்குதல் நடத்த முயற்சித்திருந்தார். இது தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதைனையடுத்து தாக்குதல் நடத்த முயற்சித்த சந்தேகநபர் பிரதேசசபை உறுப்பினரும் குடும்பத்தினதும் தன் மீது தாக்குதல் நடத்தியதாக முறைப்பாடு செய்தார். 

இதற்கமைய நேற்றுமுன்தினம் பிரதேசசபை உறுப்பினரும் அவருடைய குடும்பத்தினரும் கூண்டோடு கைது செய்யப்பட்டிருந்தனர். 

அவர்களில் பிரதேசசபை உறுப்பினரும் அவருடைய சகோதரியும் தாக்கப்பட்டதாக தொிவித்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தனர். 

இவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டும் இருந்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரதேசசபை உறுப்பினர் கூறினார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு