யாழ்.புங்குடுதீவில் பாடசாலை மாணவியின் நிர்வாண படத்தை காண்பித்து பாலியல் தொல்லை! இருவர் கைது, மேலும் இருவரை தேடும் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.புங்குடுதீவில் பாடசாலை மாணவியின் நிர்வாண படத்தை காண்பித்து பாலியல் தொல்லை! இருவர் கைது, மேலும் இருவரை தேடும் பொலிஸார்..

17 வயதான பாடசாலை மாணவியின் நிர்வாண படத்தைக் காண்பித்து மிரட்டி அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்த 2 இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் கூறியுள்ளனர். 

கைதான இளைஞர்கள் இருவரும் புங்குடுதீவு 4ம் மற்றும் 6ம் வட்டாரங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேற்படி மாணவி இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார். 

இதன்போது இருவரும் அந்தரங்கமான ஒளிப்படங்களை பரிமாறியுள்ளனர். காதல் முறிவடைந்ததையால் மாணிவியின் ஒளிப்படங்களை குறித்த இளைஞன் தனது நண்பர்களுக்கு அனுப்பியிருக்கின்றார். 

அவர்கள் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற நிலையில் மாணவி உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து இரு சந்தேகநபர்களை கைது செய்துள்ள பொலிஸார்

மேலும் இருவரை தேடி வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு