யாழ்.சாவகச்சோி - சங்கத்தானை ரயில் நிலைய பகுதியில் இராணுவ புலனாய்வு பிரிவினால் இளைஞன் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி - சங்கத்தானை ரயில் நிலைய பகுதியில் இராணுவ புலனாய்வு பிரிவினால் இளைஞன் கைது..!

யாழ்.சாவகச்சோி - சங்கத்தானை பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவரை இராணுவ புலானாய்வு பிரிவினர் கைது செய்திருக்கின்றனர். 

குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்று கிழமை இடம்பெற்றுள்ளது. சங்கத்தானை ரயில் நிலையத்தை அண்டிய பகுதியில் கஞ்சா மற்றும் ஹெரோயின் வியாபாரம் நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, 

52வது படைப்பிரிவின் இராணுவ புலனாய்வு பிரிவினர் 25 வயது மதிக்கத்தக்க குறித்த இளைஞனை கைது செய்து சாவகச்சோி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த இளைஞன் மடத்தடி பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு