தமிழகத்தில் இருந்து படகில் தாயகம் திரும்பிய 14 பேர் கடற்படையினரால் கைது!

ஆசிரியர் - Admin
தமிழகத்தில் இருந்து படகில் தாயகம் திரும்பிய 14 பேர் கடற்படையினரால் கைது!

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாமில் தங்கியிருந்த 14 பேர், சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பிய போது, காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இன்று அதிகாலை 2.00 மணியளவில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாடகைக்கு படகோட்டி வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் இவர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் கூறியுள்ளனர். பொலிஸாரின் விசாரணையின் பின்னர் 14 பேரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முன்னிலை படுத்தப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு