நீர்வேலியில் மாட்டு இறைச்சிக்கடை தீக்கிரை..
பருத்தித்துறை வீதியில் நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோயிலுக்கு செல்லும் வீதிக்கு அருகில் இருந்த மாட்டு இறைச்சிக் கடை நேற்றிரவு வெள்ளிக்கிழமை 11.30 மணியளவில் இனந்தெரியாத குழு ஒன்றினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இக் கடை வலி.கிழக்கு பிரதேச சபையினரால் நிர்வகிக்கப்படும் நிலையில் இச்சம்பவம் குறித்து கடை நடத்துபவரால் வலி.கிழக்கு பிரதேச சபையினருக்கு அறிவிக்கப்பட்டதுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
தீக்கிரையாக்கப்பட்ட கடைக்கு அருகில் இன்னுமொரு மட்டு இறைச்சிக் கடையும் ஒன்று உள்ளது இதற்கு எந்த சேதமும் ஏற்படுத்தப்படவில்லை.
இதேவேளை இங்கு இருந்த சைக்கிள் கடையொன்று கடந்த வருடம் எரியூட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.