யாழில் வீடு திரும்பிய குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஆசிரியர் - Admin
யாழில் வீடு திரும்பிய குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வீட்டில் யாருமில்லாத சமயம் பார்த்து வர்த்தகரொருவரின் வீட்டின் சமையலறைக் கூரையைப் பிரித்து உள்நுழைந்த கொள்ளையர்கள் பெறுமதியான தங்கநகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (03) பட்டப்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வீட்டின் குடும்பத் தலைவரான வர்த்தகர் தனது வர்த்தக நிலையத்திற்கும், வர்த்தகரின் மனைவி மற்றும் பிள்ளைகள் தேவை நிமிர்த்தம் யாழ். நகருக்கும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் வீட்டின் சமையலறை கூரையைப் பிரித்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் பல இலட்சம் ரூபா பெறுமதியான எட்டேகால் பவுண் தங்கநகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

வெளியே சென்ற குடும்பத்தவர்கள் மீண்டும் வீட்டுக்கு வருகை தந்த போது நகைகள் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு