யாழில் மூன்று பிள்ளைகளின் தந்தை கைது: காரணம் இதுதான்!

ஆசிரியர் - Admin
யாழில் மூன்று பிள்ளைகளின் தந்தை கைது: காரணம் இதுதான்!

யாழ்.வலி வடக்குப் பகுதியில் சிறுமியொருவரைப் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் மூன்று பிள்ளைகளின் தந்தையாரொருவர் காங்கேசன்துறைப் பொலிஸாரால் நேற்றைய தினம்(02) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சிறுமியின் தாயார் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். தந்தையார் நோயால் அவதிப்பட்டு வாழ்ந்து வருகிறார். சிறுமி பேர்த்தியாருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்படி சிறுமி திடீர்ச் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் போது சிறுமி பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்துப் பாதிக்கப்பட்ட சிறுமி பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மூன்று பிள்ளைகளின் தந்தையாரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு