யாழில் வழிப்பறித் திருடர்களை சாதுரியமாக ஏமாற்றிய பெண்

ஆசிரியர் - Admin
யாழில் வழிப்பறித் திருடர்களை சாதுரியமாக ஏமாற்றிய பெண்

குடும்பப் பெண்ணொருவர் தனது மூன்று பவுண் தங்கச் சங்கிலியைத் திருடர்களிடமிருந்து புத்திசாதுரியத்தனமாகப் பாதுகாத்துள்ளார். குறித்த சம்பவம் அண்மையில் யாழ். அச்சுவேலி தெற்கு காளிகோயிலுக்கு அருகில் அமைந்துள்ள பாடசாலை வீதியில் இடம்பெற்றுள்ளது.

தனது உறவினர் வீடொன்றுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த குறித்த குடும்பப் பெண்ணின் தங்கச் சங்கிலியை மோட்டார்ச் சைக்கிளில் தமது முகங்களைத் துணிகளால் மறைத்துக் கொண்டு வந்த இருவர் பின் தொடர்வதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாகச் சுதாகரித்த குடும்பப் பெண்மணி தனது தங்கச் சங்கிலியைக் கழற்றி அயலிலுள்ள வீடொன்றின் முற்றத்தில் எறிந்துள்ளார். பின்னர் குறித்த திருடர்கள் அங்கிருந்து சென்றதையடுத்துத் தனது தங்கச் சங்கிலியை பாதுகாப்பாக எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார்.

மேற்படி குடும்பப் பெண்ணின் சாதுரியத்தனமான செயற்பாட்டைப் பலரும் பாராட்டியுள்ளனர்.

இதேவேளை, குறித்த பகுதியில் அண்மைக் காலமாக வழிப்பறித் திருட்டுக்கள் அதிகரித்துக் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு