யாழில் நுண்நிதிக் கடன் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆசிரியர் - Admin
யாழில் நுண்நிதிக் கடன் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நுண்நிதிக் கடன் வழங்கும் நிறுவனங்கள் பொன்னாலைப் பிரதேசத்தில் தமது செயற்பாடுகளை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு சமூகச் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இந்த அறிவித்தலை மீறிக் கடன் வழங்க முற்படும் நிதி நிறுவனங்களின் பணியாளர்கள் இங்கிருந்து வலிந்து வெளியேற்றப்படுவார்கள் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

பொன்னாலையில் நுண்நிதிக் கடன் வழங்கும் நிறுவனங்களின் செயற்பாட்டால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் தலைமறைவு வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேற்படி நிறுவனங்களின் பிரதிநிதிகள் தொடர்ந்தும் புதியவர்களுக்குக் கடன்களை வழங்கி வருகின்றனர்.

எனவே, இந்த நிறுவனங்கள் வழங்கிய கடன்களை மென்போக்கான அடிப்படையில் மீள அறவிட வேண்டும். இதனை விடுத்துப் புதியவர்களுக்குக் கடன் வழங்க முற்பட்டால் அவர்களை வலிந்து வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படுமெனவும் குறித்த சமூகச் செயற்பாட்டாளர்கள் மேலும் எச்சரித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு