சாவகச்சேரியில் தந்தையின் தவறான முடிவால் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ஆசிரியர் - Admin
சாவகச்சேரியில் தந்தையின் தவறான முடிவால் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

தனது இரு குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து விட்டுத் தந்தையொருவர் தானும் விஷமருந்தியுள்ள சம்பவம் யாழ். சாவகச்சேரியில் நேற்றைய தினம்(30) பதிவாகியுள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மூவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும்,எனினும் அவர்களுக்குத் தற்போது வரை ஆபத்தில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பப் பிரச்சினைகள் காரணமாக மனைவியைப் பிரிந்து 37 வயதுடைய கணவரான தந்தை இரு சிறுபிள்ளைகளுடனும் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றிரவு திடீரென இரவு உணவில் கிருமிநாசினி கலந்து தான் உட்கொண்டதுடன் தனது இரு பிள்ளைகளுக்கும் உண்ணக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தந்தையின் விபரீத முடிவை அறிந்த வீட்டுக்கு அயலிலுள்ள உறவினர்கள் குறித்த மூவரையும் மீட்டுச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும் மேலதிக சிகிச்சைகளின் அவசியம் கருதி அவர்கள் மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவத்தில் 07 மற்றும் 10 வயதான இரு சிறு பிள்ளைகளே பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாகவும் எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு