யாழில் விபத்தினால் ஐந்து பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

ஆசிரியர் - Admin
யாழில் விபத்தினால் ஐந்து பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

யாழ்.புத்தூரில் கடந்த-27 ஆம் திகதி பகல் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்றுத் திங்கட்கிழமை (30) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விற்பனைநிலையமொன்றுக்குத் துவிச்சக்கர வண்டியில் பயணித்த அவர் துவிச்சக்கர வண்டியைத் திருப்ப முற்பட்ட போது மோட்டார்ச்சைக்கிளொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானார்.

இந்தச் சம்பவத்தில் துவிச்சக்கர வண்டியைச் செலுத்திச் சென்ற குடும்பஸ்தரும், மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சாரதியும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

யாழ். ஆவரங்கால் மேற்குப் பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தையா வைகுந்தநாதன் (வயது-64) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு