யாழில் விளையாடிய களைப்பில் இரண்டரை வயதுக் குழந்தையின் செயல்!

ஆசிரியர் - Admin
யாழில் விளையாடிய களைப்பில் இரண்டரை வயதுக் குழந்தையின் செயல்!

விளையாடிய பின்னர் ஏற்பட்ட களைப்பைப் போக்குவதற்காகத் தண்ணீர் என நினைத்துச் சோடாப் போத்தலுக்குள் இருந்த மண்ணெண்ணையைக் குடித்த இரண்டரை வயதுக் குழந்தை யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் யாழ். தென்மராட்சி கச்சாய் தெற்குப் பகுதியில் நேற்றைய தினம்(29) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தந்தையும், தாயாரும் வேலைநிமிர்த்தம் வெளியே சென்றுவிடத் தனது பேர்த்தியாருடன் குழந்தை நின்றுள்ளது. விளையாட்டுக் காரணமாக களைப்பு ஏற்படவே அங்கிருந்த மண்ணெண்ணையைத் தண்ணீர் என நினைத்துப் பருகியுள்ளது.

இதனால், பாதிக்கப்பட்ட குழந்தை உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுத் தற்போது சிகிச்சை பெற்று வருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு